பருப்பு உசிலிகள்
பருப்பு உசிலிகள், அதுவும் கொத்தவங்காய் உசிலி, தமிழ்நாட்டின் விசேஷ உணவு. எங்கள் வீட்டில் எல்லாருக்கும் மிகப் பிடித்தது. மோர்க்குழம்புடன் சேர்த்து சாப்பிட்டால், ருசியோ ருசி!
# 1. கொத்தவரங்காய் பருப்பு உசிலி
கொத்தவரங்காய், 500 கிராம்
துவரம்பருப்பு, 100 கி
கடலைப் பருப்பு, 75 கி
மிளகாய் வற்றல், 8
எண்ணெய், 3 டேபிள்ஸ்பூன்
தாளிக்க = கடுகு, பெருங்காயம்
உப்பு
காயை அலம்பி, பொடிசாக நறுக்கிக் கொள்ளவும்.
தண்ணீரில் வேக விடவும்.
தண்ணீரை இறுத்து, காயை தனியாக வைத்துக் கொள்ளவும்.
பருப்புகளை 30 நிமிஷம் ஊறவைக்கவும்.
மிளகாய் வற்றல், உப்பு போட்டு கரகரவென (வடை மாவு பதத்திற்கு) அரைக்கவும்.
பந்துகளாக உருட்டி, குக்கரில் ஆவியில் வேக விடவும்.
ஆறியதும், பருப்பு கலவையை உதிர்த்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.
காயையும் பருப்பையும் போட்டு சுமார் 5 நிமிஷம் கிளறவும்.
உசிலி ரெடி
# 2. பீன்ஸ் பருப்பு உசிலி
எல்லா உசிலிகளுக்கும் செய்முறை ஒரேமாதிரிதான்.
# 3. வாழைப்பூ பருப்பு உசிலி
# 4. முட்டை கோஸ் பருப்பு உசிலி
ராஜப்பா
5:00 PM
5 March 2010
Subscribe to:
Post Comments (Atom)
-
நம் வீடுகளில் (13ஆம் நாள் சுபஸ்யம்) க்ரேக்கியத்தன்றோ அல்லது சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு மறுநாள் செய்யும் ஸ்வாமி சமாராதனையன்று செய்யும் சமையலை...
-
நம் வீடுகளில் செய்யும் சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பண்ண வேண்டிய சமையலை விவரமாக காண்போம். 5 சுமங்கலிகளையும், 1 கன்யாப் பெண்ணையும் அழைக்க வேண...
-
திருவாதிரை கூட்டு செய்ய பல காய்கறிகள் தேவைப்படுகின்றன - எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் போதும்; ஆனால் கடையில் கொஞ்சம் கேட்டால் கொடுப்பதில்லை ! என்ன ...
usiliyil thengayum pottal chumma nallaa tasty yaga irukkum, vegavaitha paruppai tirumba orudaram mixiyil pottu oru suthu suthi eduthal paruppu appadiye poopola irukkum.
ReplyDelete