PARUPPU SAADAM
தேவையான பொருட்கள்
அரிசி – 200 கிராம்
துவரம்பருப்பு – 100 கிராம்
உரித்த சின்ன வெங்காயம் – 10 – 12
கறிவேப்பிலை – கொஞ்சம்
உரித்த பூண்டு – 10 – 12
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 1/2 டீஸ்பூன்
சிகப்பு மிளகாய் – 7
எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்;
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
1. குக்கரில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, பூண்டை இளஞ் சிவப்பாக வதக்கவும்.
2. அதிலேயே சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.
3. கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மிளகாய் இவற்றை சேர்த்து வதக்கவும்.
4. இளஞ் சிவப்பாக மாறியதும், 4 கப் தண்ணீரும், உப்பும் சேர்க்கவும்.
5. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், அலம்பிய துவரம் பருப்பையும், அரிசியையும் சேர்க்கவும்.
6. நன்றாக கலக்கி மூடிவைக்கவும்.
7. அனலைக் குறைத்து, குக்கரின் வெயிட் (weight) போட்டு 10 முதல் 12 நிமிடங்கள் வேகவைக்கவும்.
8. மூடியை திறந்ததும், உருக்கிய நெய்யையும், தேங்காய் எண்ணையையும் சேர்த்து, சூடாகப் பரிமாறவும்.
சமீபத்தில் சென்னைக்கு வந்த போது ரமேஷ் சொன்ன ஒரு புதிய சாதம். செய்து பாருங்கள், சுவை பிரமாதமாக இருக்கிறது.
Ramesh
30-12-2007
12:05 PM
ராஜப்பா
Showing posts with label Sambar Vengayam. Show all posts
Showing posts with label Sambar Vengayam. Show all posts
Subscribe to:
Posts (Atom)
-
நம் வீடுகளில் (13ஆம் நாள் சுபஸ்யம்) க்ரேக்கியத்தன்றோ அல்லது சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு மறுநாள் செய்யும் ஸ்வாமி சமாராதனையன்று செய்யும் சமையலை...
-
திருவாதிரை கூட்டு செய்ய பல காய்கறிகள் தேவைப்படுகின்றன - எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் போதும்; ஆனால் கடையில் கொஞ்சம் கேட்டால் கொடுப்பதில்லை ! என்ன ...
-
நம் வீடுகளில் செய்யும் சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பண்ண வேண்டிய சமையலை விவரமாக காண்போம். 5 சுமங்கலிகளையும், 1 கன்யாப் பெண்ணையும் அழைக்க வேண...