Showing posts with label Veg Pulao. Show all posts
Showing posts with label Veg Pulao. Show all posts

29 March 2018

Vegetable Pulao 1


காய்கறிகள் புலவ்
தேவையானவை

அரிசி  - 4 கப்
காய்கறிகள்
உருளை -- 4
வெங்காயம் - 2
கத்தரிக்காய் -- 3
வாழைக்காய் -- பாதி
பூசணி -- சிறு பத்தை
பரங்கிக் காய்  -- சிறு பத்தை

தக்காளி -- 2
கிராம்பு -- 4
ஏலக்காய் -- 2
பட்டை- 2 செமீ
மிளகாய் பொடி  --  2 டீஸ்பூன்

இஞ்சி -- 5 செமீ
பூண்டு -- 12 பற்கள்
சின்ன வெங்காயம் -- 8
பச்சை மிளகாய் -- 3
எண்ணெய் --  4 டேபிள்ஸ்பூன்
நெய் --- 3 டேபிள்ஸ்பூன்

உப்பு -- தேவைக்கேற்ப

செய்முறை

அரிசியை தண்ணீரில் நன்றாக களைந்து, தண்ணீரை இறுத்து விட்டு, 10 - 12 நிமிஷம் அரிசியை வைத்துக்கொள்ளவும்.
கிராம்பு, ஏலக்காய், பட்டை இவைகளை பொடித்துக் கொள்ளவும்.

காய்கறிகளை சதுரங்களாக நறுக்கவும்.

கொதிக்கும் நீரில் தக்காளியை 2 நிமிஷம் போட்டு, பின்னர் தோலுரித்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சியை தோலுரித்து, நன்கு அலம்பி, பூண்டுடன் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும்.
குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்/நெய் விட்டு, சூடானதும், பொடித்த கிராம்பு முதலானவைகளை போட்டு பொரித்துக் கொள்ளவும்.

அடுத்து, வெங்காயம், பச்சை மிளகாய் விழுது; 4 நிமிஷம்

அடுத்து, பூண்டு இஞ்சி விழுது; 3 நிமிஷம்
மிளகாய்ப் பொடி, உப்பு சேர்க்கவும்; 2 நிமிஷம் வதக்கவும்.

நறுக்கிய காய்கறிகளை போட்டு, மிச்சமுள்ள நெய்/எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன் ஊற்றி, வதக்கவும் - 8 நிமிஷம்.
களைந்த அரிசியை போட்டு, 3 நிமிஷம் வதக்கவும்.

காய்கறிகளும், அரிசியும் நன்கு ஒன்றுசேர வேண்டும்.

5-6 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தக்காளி விழுதை சேர்க்கவும்.
குக்கரை மூடி, சமைக்கவும்.

4 விஸில் வந்தபிறகு அடுப்பை அணைக்கவும்.
வெங்காயம்+தக்காளி RAITHA-வுடன், சூடாக புலவ் சாப்பிடவும்.
rajappa
29-12-2013

Vegetable Pulao 2


VEGETABLE PULAO 2


அரிசி  - 4 கப்

காய்கறிகள்

உருளை -- 4

வெங்காயம் - 2

காரட் -- 3

பீன்ஸ் -- 15

நூல்கோல் -- 1

காலிஃப்ளவர்  -- கொஞ்சம்

குடைமிளகாய் -- பெரியது 1

தக்காளி -- 2
கிராம்பு -- 4

ஏலக்காய் -- 2

பட்டை- 2 செமீ

இஞ்சி -- 5 செமீ

பூண்டு -- 12 பற்கள்

சின்ன வெங்காயம் -- 8

பச்சை மிளகாய் -- 3

எண்ணெய் --  4 டேபிள்ஸ்பூன்

நெய் --- 3 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப


METHOD

அரிசியை தண்ணீரில் நன்றாக களைந்து, தண்ணீரை இறுத்து விட்டு, 10 - 12 நிமிஷம் அரிசியை தனியாக வைத்துக் கொள்ளவும்.

கிராம்பு, ஏலக்காய், பட்டை இவைகளை பொடித்துக் கொள்ளவும்.

காய்கறிகளை சதுரங்களாக நறுக்கவும்.

கொதிக்கும் நீரில் தக்காளியை 2 நிமிஷம் போட்டு, பின்னர் தோலுரித்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

இஞ்சியை தோலுரித்து, நன்கு அலம்பி, பூண்டுடன் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும்.

குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்/நெய் விட்டு, சூடானதும், பொடித்த கிராம்பு முதலானவைகளை போட்டு பொரித்துக் கொள்ளவும்.

அடுத்து, வெங்காயம், பச்சை மிளகாய் விழுது 4 நிமிஷம் வதக்கவும்.

அடுத்து, பூண்டு இஞ்சி விழுதுபோட்டு 3 நிமிஷம் வதக்கவும்.

மிளகாய்ப் பொடி, உப்பு சேர்த்து, 2 நிமிஷம் வதக்கவும்.

நறுக்கிய காய்கறிகளை போட்டு, மிச்சமுள்ள நெய்/எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன் ஊற்றி, 8 நிமிஷம். வதக்கவும்.

களைந்த அரிசியை போட்டு, 3 நிமிஷம் வதக்கவும்.

காய்கறிகளும், அரிசியும் நன்கு ஒன்று சேர வேண்டும்.

5-6 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தக்காளி விழுதை சேர்க்கவும்.

குக்கரை மூடி, சமைக்கவும்.

4 விஸில் வந்தபிறகு அடுப்பை அணைக்கவும்.

வெங்காயம்+தக்காளி RAITHA-வுடன், சூடாக புலவ் சாப்பிடவும்.

Rajappa
7-7-2014

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...