04 April 2018

Capsicum Tomato Rice

CAPSICUM TOMATO RICE


Ingredients:
2 cup rice
2 Medium size onion
3 Medium size tomato
3 Capsicum
1 Tablespoon chopped ginger
4 green chillies
1/2 tea spoon mustard seeds
8-9 curry leaves
1 tea spn urad dal
A pinch haldi powder
2 tbl spn chopped coriander leaves
Ghee – 2 tablespoon
Salt – to taste


Method:
1. Cook rice so that each grain is separate
2. Let the rice cool to room temperature
3. Heat ghee and add mustard seeds, urad dal.
4. When they start popping, add green chilies, curry leaves, ginger
5. Fry for a minute and add onion, let them cook till they are soft
6. Add capsicum, tomatoes, salt, turmeric
7. Cover and let it cook on a medium heat till the tomatoes and capsicum are softened
8. Add rice and mix well
9. Top it with coriander leaves


Serves – 4
Preparation time – 30 minutes


Ramesh
13-9-2009

பிரிஞ்சி சாதம்

பிரிஞ்சி சாதம்.

தேவையான பொருட்கள்:


பச்சரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளிப் பழம் - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு - 8 பல்
பச்சை பட்டாணி - 1/4 கப்
காரட் - 1
பீன்ஸ் - 4
உருளைக் கிழங்கு - 1
காலிபிளவர் துண்டுகள் - 1/2 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
நெய் அல்லது எண்ணெய் - 8 டேபிள்ஸ்பூன்
பட்டை இலை - சிறிது Bayleaf
கிராம்பு - 4
பட்டை - 3 துண்டுகள்
உப்பு - தேவைக்கேற்றவாறு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
கொத்துமல்லித் தழை - சிறிது

செய்முறை:

அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாயை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

தக்காளி, பூண்டு, இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

காய்கறிகளையும் மீடியமாக நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பிலேற்றி நெய் அல்லது எண்ணெயை விட்டு சூடானதும் அதில் பட்டை இலை, பட்டை, கிராம்பு சேர்த்து சற்று சிவந்ததும் அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதில் தக்காளித் துண்டுகளைப் போட்டு வதக்கவும். அத்துடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டுக் கிளறி விடவும்.

பின் அதில் நறுக்கி வைத்துள்ள காய், பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து கிளறி, பின்னர் அதில் ஊற வைத்துள்ள அரிசியை, தண்ணீரை வடித்து விட்டு சேர்க்கவும். அரிசி நன்றாக, தொட்டால் சுடும் வரைக் கிளறி விடவும். அத்துடன் 4 கப் தண்ணீர், எலுமிச்சை சாறு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி மூடி வைத்து, இரண்டு விசில் வரும் வரை வேக விடவும்.

குக்கர் ஆறியவுடன், திறந்து கொத்துமல்லித் தழையைத் தூவி பரிமாறவும்.

குறிப்பு: இதை பாசுமதி அரிசியிலும் செய்யலாம். பாசுமதி அரிசி உப்யோகித்தால், தண்ணீரின் அளவை 3 கப்பாக குறைத்துக் கொள்ளவும். தண்ணீருக்குப் பதில் தேங்காய் பால் உபயோகித்தும் செய்யலாம்.

காய்கறிகள் இல்லாமல் வெறும் பிரிஞ்சி சாதமாகவும் செய்யலாம். மசாலா வாசனை கூடுதலாக வேண்டுமென்றால், 1/2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூளைச் சேர்க்கலாம்.

ராஜப்பா
01-07-2012
பகல் 12:45 மணி

முக்கிய குறிப்பு:
இன்று 01-07-2012 எழுதிய 4 போஸ்ட்டுகளுக்கும் “அடுப்பங்கரை” Blogகிற்கு எனது நன்றிகள் பல.

03 April 2018

Paneer Fried Rice

Ingredients

Basmati rice (soak in water for 30 minutes):-2 cups
Green bell pepper (chopped):-1    [capsicum]
Grated paneer:-1 cup
Medium sized onion (cut lengthwise):-1
Frozen/fresh peas :-½ cup
Soy sauce :-1 tsp
Green onions (chopped):-½ cup    [வெங்காயத் தாள், spring onion]
Pepper :-To taste     Salt :-To taste

Preparation method

Cook soaked basmati rice by adding1 tsp of salt, 1 tsp of oil and 4 cups of water. (put rice once water starts boiling, cook over high heat till 60 percent of water evaporates and cook on a low flame till water evaporates completely. Separate the grains.)
In a pan, heat oil and fry the chopped onion until light golden over high heat.
Mix green onions, peas and green bell pepper. Sauté for 3 minutes.
Reduce the flame and put the grated paneer. Stir well.
Combine the salt,pepper and soy sauce in it. Mix well.
Mix the cooked rice in it and combine it well.
Sprinkle some pepper powder on top and serve hot.

  Serving Suggestions • Sprinkle with spring onion greens and cilantro. Serve hot with spicy side dish. • Garnish with chopped spring onions or cashews. Serve with any hot gravy or vegetable Manchurian or green beans with garlic.

www. FOODFOOD   .com

rajappa41
05-01-2014

CAPSICUM

GREEN ONIONS
(spring onion)

02 April 2018

சம்பா சாதம் - சிதம்பரம் கொத்ஸு

சம்பா சாதம் - கொத்ஸு.



சிதம்பரம் ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு தினம் தினம் காலையில் சம்பா சாதமும், கத்தரிக்காய் கொத்ஸுவும் நைவேத்யம் பண்ணுவது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. 100 - 150 கிலோ அரிசி போட்டு சம்பா சாதம் தினமும் செய்கிறார்கள்.

நைவேத்யம் ஆன பிறகு, இந்த சாதத்தை கோவிலிலுள்ள எல்லா தீக்ஷிதர்களுக்கும் பங்கிட்டு கொடுத்து விடுவார்கள். ஸ்வாமி பிரசாதம் என்பதை தவிர, வழக்கமாகவே சம்பா சாதமும், கொத்ஸுவும் மிக மிக ருசியாக இருக்கிறது.

போன வாரம் 19 ஜூன் 2013 அன்று நான் சிதம்பரம் கோயிலில் இதை சாப்பிட்டேன். செய்முறையை தீக்ஷிதர் மனைவியிடம் கேட்டு அறிந்து கொண்டேன். இதோ செய்முறை:

சம்பா சாதம் (மிளகு சாதம்) :


சம்பா சாதம்

தேவையானவை

1 டேபிள்ஸ்பூன்   மிளகு
1/2 டேபிள் ஸ்பூன்  ஜீரகம்
2 டேபிள்ஸ்பூன்     நெய்
200 கிராம் அரிசி
10 முந்திரி பருப்பு உடைத்தது, நெய்யில் வறுத்தது.
உப்பு

செய்முறை:

அரிசியை நன்கு அலம்பி, குக்கரில் தண்ணீர் ஊற்றி, அரிசியை போட்டு, சாதம் சமைத்துக் கொள்ளவும். சாதம் உதிர் உதிராக இருக்க வேண்டும்.
மிளகு, ஜீரகத்தை வறுத்து, ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். 
சாதத்தில் நெய் விட்டு, மிளகு, ஜீரகம் பொடியையும், முந்திரிப் பருப்பையும் போட்டு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.  
கொத்ஸுவுடன் சேர்த்து சாப்பிடவும்.


சம்பா சாதம் + கொத்ஸு



கத்தரிக்காய் கொத்ஸு.

தேவையான சாமான்கள்:

கத்தரிக்காய் --- 250 கிராம்.
புளி --- ஒரு எலுமிச்சை அளவு.
மஞ்சள் பொடி -- ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை -- கொஞ்சம்
கொத்ஸு பொடி --- 5 டீஸ்பூன் (செய்முறை கீழே உள்ளது)
நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
கடுகு --- 1 டீஸ்பூன்
வெல்லம் (துருவியது) --- 1/2 டீஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு.
 

கொத்ஸுப் பொடி:

கொத்ஸு பொடிக்கு வேண்டிய சாமான்கள்.

கொத்தமல்லி விதை --- 3 டேபிள்ஸ்பூன்
ஜீரகம் -- 1/2 டீஸ்பூன்
துவரம்பருப்பு -- 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம்  -- 1/4 டீஸ்பூன்
கட்டிப் பெருங்காயம் - கொஞ்சம் (எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்)
சிகப்பு வர மிளகாய் --- 5

ஒரு வாணலியில் மேலே எழுதியவைகளை ஒவ்வொன்றாக போட்டு, வறுத்து, அரைத்துக் கொள்ளவும். எண்ணெய் விட வேண்டாம்.

கொத்ஸு செய்முறை:


கத்தரிக்காய் வதங்குகிறது.

ஒரு கப் தண்ணீரில் புளியை போட்டு ஊறவிடவும்.
கத்தரிக்காய்களை நீள வாட்டில் நறுக்கவும்; தண்ணீரில் போடவும்.
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி, கடுகு போடவும்.
கடுகு வெடித்தவுடன், கத்தரிக்காய் துண்டங்களை (நீரை இறுத்து விட்டு) போடவும். கறிவேப்பிலை போடவும்.

கத்தரிக்காய் 5 நிமிஷங்கள் வதங்கட்டும்.

இதற்கிடையே, ஊறிய புளியை எடுத்து, தண்ணீர் சேர்க்காமல், பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். (concentrated).
புளிச்சாற்றில் பாதியை கத்தரிக்காயுடன் சேர்க்கவும்.
3 அல்லது 4 டீஸ்பூன் கொத்ஸு பொடியை போட்டு, நன்கு கலக்கவும்.
உப்பு போடவும்.
மீதியுள்ள நல்லெண்ணெயையும் ஊற்றவும்.
மர கரண்டியால் கத்தரிக்காய்களை மசிக்கவும்.
கொத்ஸுவை கொஞ்சம் சுவைத்துப் பார்த்து, உப்பு, உறைப்பு, புளிப்பு எது குறைகிறதோ, அந்த சுவையை கூட்டவும்.
வெல்லம் போடவும்.
1/2 கப் தண்ணீர் ஊற்றி 4-5 நிமிஷங்கள் கொதிக்க விடவும்.
எண்ணெய் மேலே வந்தவுடன், அடுப்பை அணைத்து விடலாம்.

கொத்ஸு ரெடி.
இந்த கொத்ஸுவை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் கூட சேர்த்து சாப்பிடலாம். ஒரு வாரம் வரை கெடாது.


கத்தரிக்காய் கொத்ஸு.

ராஜப்பா
22-06-2013



01 April 2018

மிளகு சாதம்

மிளகு சாதம்.

தேவையானப்பொருட்கள்:

அரிசி - 1 கப்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
உப்பு - தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசியைக் கழுவி தேவையான தண்ணீரைச் சேர்த்து குக்கரில் உதிர் உதிராக சமைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை விட்டு அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் தனியாக தேங்காய்த் துருவலைப் போட்டு வதக்கவும். சற்று ஆறியவுடன், வறுத்த பருப்புகள், தேங்காய்த்துருவல் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்கவும்.

மிளகை சற்று கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

இன்னொரு வாணலில் நெய்யை விட்டு சூடாக்கி அதில் முந்திரிப்பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும். அதில் மிளகுப்பொடியையும் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்து, அத்துடன் சாதத்தைச் சேர்க்கவும். அரைத்து வைத்துள்ள பருப்பு/தேங்காய்ப் பொடி, உப்பு ஆகியவற்றையும் சாதத்தில் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

மிளகு சாதம் ரெடி.
 
ராஜப்பா
01-07-2012
பகல் 12:20 மணி

Paruppu Saadam --- (Ramesh)

PARUPPU SAADAM

தேவையான பொருட்கள்

அரிசி – 200 கிராம்
துவரம்பருப்பு – 100 கிராம்

உரித்த சின்ன வெங்காயம் – 10 – 12
கறிவேப்பிலை – கொஞ்சம்
உரித்த பூண்டு – 10 – 12
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 1/2 டீஸ்பூன்
சிகப்பு மிளகாய் – 7
எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்;
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

1. குக்கரில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, பூண்டை இளஞ் சிவப்பாக வதக்கவும்.

2. அதிலேயே சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.

3. கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மிளகாய் இவற்றை சேர்த்து வதக்கவும்.

4. இளஞ் சிவப்பாக மாறியதும், 4 கப் தண்ணீரும், உப்பும் சேர்க்கவும்.

5. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், அலம்பிய துவரம் பருப்பையும், அரிசியையும் சேர்க்கவும்.

6. நன்றாக கலக்கி மூடிவைக்கவும்.

7. அனலைக் குறைத்து, குக்கரின் வெயிட் (weight) போட்டு 10 முதல் 12 நிமிடங்கள் வேகவைக்கவும்.

8. மூடியை திறந்ததும், உருக்கிய நெய்யையும், தேங்காய் எண்ணையையும் சேர்த்து, சூடாகப் பரிமாறவும்.

சமீபத்தில் சென்னைக்கு வந்த போது ரமேஷ் சொன்ன ஒரு புதிய சாதம். செய்து பாருங்கள், சுவை பிரமாதமாக இருக்கிறது.

Ramesh
30-12-2007
12:05 PM
ராஜப்பா

பார்த்தசாரதி பெருமாள் கோயில் புளியோதரை - Ver02

புளியோதரை

(திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயில் செய்முறை)

”தாயார் சன்னதியில் தரிசனம் முடித்துக்கொண்டு திரும்புகையில் மடைப்பள்ளிப் பிரசாதக் கடையில் சுறுசுறுப்பாக விற்பனை நடந்து கொண்டிருந்தது. சர்க்கரைப் பொங்கல் கேட்டேன். தீர்ந்துவிட்டது என்றார்கள். புளியோதரை இருந்தது. வாங்கிக் கொண்டேன். ஒரு சிறிய தொன்னைப் புளியோதரை ஆறரை ரூபாய். ஆனால் அமிர்தம் தான். திருவல்லிக்கேணி கோவிலில் சர்க்கரைப் பொங்கல் தான் ரொம்ப விசேஷம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அதைத் தூக்கியடிப்பதாக இருக்கிறது புளியோதரை. இதுவரை ருசிக்காதவர்கள் வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்கள்” - ரா.கி.ரங்கராஜன், (நாலுமூலை)


தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 5 கப்  ( 1 கிலோ)
நல்லெண்ணை – 50 மிலி (3 டேபிள்ஸ்பூன்)
மிளகு – 200 கிராம்
(மிளகு 200 கிராம் என்பது கொஞ்சம் அதிகம்தான்; தேவையான அளவு மிளகுப் பொடி போட்டுக்கொள்ளவும். மிளகுப் பொடி மட்டும்தான் காரத்திற்கு என்பதை நினைவில் கொள்க)

புளிக்காய்ச்சல் தயாரிக்க

புளி – 100 கிராம்
நல்லெண்ணை – 100 மிலி (6 டேபிள்ஸ்பூன்)
கடலைப் பருப்பு – 100 கிராம் ( 1/2 கப்)
உளுத்தம் பருப்பு – 100 கிராம் (1/2 கப்)
வெந்தயம் – 10 கிராம் (2 டீஸ்பூன்)
சீரகம் – 5 கிராம் (1 டீஸ்பூன்)
கடுகு – 10 கிராம் ( 2 டீஸ்பூன்)
பெருங்காயம் – சிறிது
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள் – 10 கிராம் (2 டீஸ்பூன்)

செய்முறை:

புளிக்காய்ச்சலை முதல்நாளே செய்துவைக்க வேண்டும்.

புளியை கெட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

நல்லெண்ணைய வாணலியில் வைத்து, அடுப்பை மெதுவாக எரிய விடவேண்டும்.

எண்ணை காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு நன்றாகச் சிவக்க வறுக்கவும்.

பின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொண்டு, கெட்டியாக கரைத்துவைத்துள்ள புளியைச் சேர்க்கவும்.

2 நிமிடம் கொதித்தவுடன், உப்பு, மஞ்சள்பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

புளிநீர் பாதியாக வற்றும் வரைக் கொதிக்கவிட்டு, இறக்கி எடுத்துவைக்கவும். [மறுநாள் புளிக்காய்ச்சலைத் திறந்ததுமே கும்'மென்று மணமாக இருக்கவேண்டும். சரியாகக் காய்ச்சவில்லை என்றால் புளியின் பச்சை வாசனை வரும்.]

மறுநாள் பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் பரத்தி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து ஆறவிட வேண்டும்.

சாதம் ஆறியதும், கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும்.

பின்னர் தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணையோடு கலந்து, அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்.

my thanks to Jayashree Govindarajan 

Rajappa
12 noon
16 March 2010

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...