19 September 2010

வாழைப்பூ உசிலி



வாழைப்பூ உசிலி

வாழைப்பூ, 1
துவரம்பருப்பு, 100 கி
கடலைப் பருப்பு, 75 கி
மிளகாய் வற்றல், 8
எண்ணெய், 3 டேபிள்ஸ்பூன்
தாளிக்க = கடுகு, பெருங்காயம்
உப்பு

செய்முறை
வாழைப்பூவை ஆய்ந்து, பொடிதாக நறுக்கி, சிறிது மோர் ஊற்றிய நீரில் போடவும்.

தண்ணீரில் வேக விடவும்.

தண்ணீரை இறுத்து, காயை தனியாக வைத்துக் கொள்ளவும்.

மேற்சொன்ன பருப்புகளை 30 நிமிஷம் ஊறவைக்கவும்.

மிளகாய் வற்றல், உப்பு போட்டு கரகரவென (வடை மாவு பதத்திற்கு) அரைக்கவும்.

பந்துகளாக உருட்டி, குக்கரில் ஆவியில் வேக விடவும்.

ஆறியதும், பருப்பு கலவையை உதிர்த்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.

காயையும் பருப்பையும் போட்டு சுமார் 5 நிமிஷம் கிளறவும்.

உசிலி ரெடி.





வாழையடி வாழை

வாழைமரம் - மிக உபயோகமுள்ள ஒரு மரம். ஒரு முறை நட்டு விட்டால், “வாழையடி வாழையாக” தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்.

வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் பயன்படுத்தப் படுகிறது. எல்லா விசேஷங்களுக்கும் வீட்டு வாசலில் வாழைமரத்தைக் கட்டுவது வழக்கம். வரலக்ஷ்மி விரதம், விநாயகர் பூஜை, ஸத்யநாராயண விரதம் போன்ற பூ்ஜைகளில் வாழைக்கன்றுகளை கட்டி வழிபடுகிறோம்.

வாழை இலையில் உணவு பரிமாறுவது நம் தென்னிந்திய விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.

வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
.
வாழைப் பூ


100 கிராம் வாழைப்பூவில்
கால்சியம் - 32 மி.கி.
பாஸ்பரஸ் - 42 மி.கி.
புரதம் - 1.3 மி.கி.
நார்ச்சத்து - 1.3 மி.கி.
மற்றும் இரும்புச் சத்து, வைட்டமின் பி மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பூ துவர்ப்புத் தன்மை உள்ளதால் இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது,.

வாழைப்பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால் இரத்த அழுத்தம் குறையும். இரத்ததில் உள்ள கொழுப்பை குறைக்கும். இரத்தம் சுத்தமாகும். இரத்த ஓட்டம் சீராகும். இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

வாழைப் பூ சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு கலந்து அருந்தினால் வெட்டை நோய், குருதி வெள்ளை, வயிற்றுக் கடுப்பு நீங்கும். மலச் சிக்கலைப் போக்கும். மூல நோயால் அவதிப்படுபவர்களுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும். தாதுவை விருத்தி செய்யும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள்,

வாழைப்பூ - கால் பாங்கு
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டுப்பல் - 4
இஞ்சி - 1 துண்டு
நல்ல மிளகு - 5 எடுத்து சூப் செய்து காலை உணவுக்குப்பின் அருந்தி வந்தால், சர்க்கரை நோயின் பாதிப்பு குறையும்.

வாழைத்தண்டு சிறுநீரக கற்களை அகற்றக்க்கூடிய ஒரு சிறந்த மருந்து என்பது யாவரும் அறிந்த ஒன்று.

வாழைக்காயில் நிறைய புரத சத்தும், மாவு சத்தும் உள்ளன. வாழைக்காய் சேர்க்காத பண்டிகை / ஸ்ராத்த சமையல்களே கிடையாது.

வாழைப் பழத்தில் மாவுச் சத்து 27.0%, புரத சத்து 1.2%, கொழுப்பு சத்து 0.3%, நார் சத்து 0.5%, ஈரப்பதம் 70%, வைட்டமின்கள் /தாதுப் பொருட்கள் 1.0% அளவிற்கு உள்ளன. பொட்டாஷியம் அதிக அளவில் உள்ளது.

வாழைப் பழத்தினை உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொடுக்க சீதபேதி நிற்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் சீதபேதிக்கு நன்கு கனிந்த பழங்களை பயன்படுத்த வேண்டும். நன்கு குழைத்து கொடுக்க வேண்டும்.

SRIDHAR from New Delhi writes, "Apart from all the benefits of banana it has a great feature, it works as an enzyme. It can control loose motion (if you have 4-5 bananas in one go) and it can release constipation.



And u must have noticed one thing,
Azhughi pona vazai pazathail kooda endha oru poochiyo, puzuvo anuguvadhu illai. Highly medicated fruit."

வாழை நார் பூத்தொடுக்க பயன்படுகிறது. வாழை நார் கப்பலில் எண்ணெய் கசிவை நிறுத்துவதில் மிக பயனுள்ளதாக இருக்கிறது.

வாழைப்பட்டை: வாழைமரத்தின் அடி பாகத்திலிருந்து இது கிடைக்கிறது. மிகவும் குளிர்ச்சியானது; மருத்துவ குணங்கள் நிரம்பியது. நெருப்புக் காயங்கள் பட்டு (FIRE BURNS) உடலில் புண்கள் ஏற்படும்போது, வாழைப்பட்டைகளை படுக்கை போல போட்டு அதன் மீது படுக்க வைப்பார்கள்.

வாழை குறித்து இன்னும் விவரங்களுக்கு இங்கே படிக்கவும்.

20 July 2010

SPINACH SAUCE

Spinach Sauce
(Spinach = Paalak)

Ingredients

1 kg spinach, blanched, squeezed, dry and coarsely chopped.
1 cup onion, diced
4 cloves garlic, minced
1 tbsp butter
250 grams cooked noodles, or pasta, or potatoes
Cheese, freshly grated

Method

Heat butter in a pan

Add onion and saute until transparent.

Add garlic and saute for a minute.

Add spinach (paalak) and stir-fry until bright green.

Remove from flame, and cool.

When cool, blend to a paste using a little water if required.

When done, reheat gently and add cooked noodles or pasta or potatoes.

Stir properly so it is well coated.

Serve warm with grated cheese.

rajappa
11:25 AM
20 July 2010

** from Readers' Digest,  January 2010

05 March 2010

பருப்பு உசிலிகள்

பருப்பு உசிலிகள்

பருப்பு உசிலிகள், அதுவும் கொத்தவங்காய் உசிலி, தமிழ்நாட்டின் விசேஷ உணவு. எங்கள் வீட்டில் எல்லாருக்கும் மிகப் பிடித்தது. மோர்க்குழம்புடன் சேர்த்து சாப்பிட்டால், ருசியோ ருசி!

# 1. கொத்தவரங்காய் பருப்பு உசிலி


கொத்தவரங்காய், 500 கிராம்
துவரம்பருப்பு, 100 கி
கடலைப் பருப்பு, 75 கி
மிளகாய் வற்றல், 8
எண்ணெய், 3 டேபிள்ஸ்பூன்
தாளிக்க = கடுகு, பெருங்காயம்
உப்பு

காயை அலம்பி, பொடிசாக நறுக்கிக் கொள்ளவும்.

தண்ணீரில் வேக விடவும்.

தண்ணீரை இறுத்து, காயை தனியாக வைத்துக் கொள்ளவும்.

பருப்புகளை 30 நிமிஷம் ஊறவைக்கவும்.

மிளகாய் வற்றல், உப்பு போட்டு கரகரவென (வடை மாவு பதத்திற்கு) அரைக்கவும்.

பந்துகளாக உருட்டி, குக்கரில் ஆவியில் வேக விடவும்.

ஆறியதும், பருப்பு கலவையை உதிர்த்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.

காயையும் பருப்பையும் போட்டு சுமார் 5 நிமிஷம் கிளறவும்.

உசிலி ரெடி

# 2. பீன்ஸ் பருப்பு உசிலி

எல்லா உசிலிகளுக்கும் செய்முறை ஒரேமாதிரிதான்.

# 3. வாழைப்பூ பருப்பு உசிலி


# 4. முட்டை கோஸ் பருப்பு உசிலி


ராஜப்பா
5:00 PM
5 March 2010

சேப்பங்கிழங்கு Seppankizhangu

சேப்பங்கிழங்கு, ARBI or Arvi (hindi), Colacosia or TARO(English), Chamagadda (telugu)

தமிழ்நாட்டில் நாம் சேப்பங்கிழங்கை கறி பண்ணவும், வறுவல் பண்ணவும், மோர்க்குழம்பில் போடவும் உபயோகிக்கிறோம்.

சேப்பங்கிழங்கு கறி (Roast)

சேப்பங்கிழங்கு, 1 கிலோ
எண்ணெய், 4 டேபிள்ஸ்பூன்
மிளகாய்ப் பொடி, 3 டீஸ்பூன்
மஞ்சள் பொடி, 1 டீஸ்பூன்
உப்பு, 2 டீஸ்பூன்



கிழங்கை வேகவைக்கவும். தோல் உரித்து, கொஞ்சம் சிறிய துண்டங்களாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு பெரிய தட்டில் கிழங்கைப் போட்டு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து பிசறிக் கொள்ளவும். சிறிது நேரம் (15 நிமிஷம்) ஊறட்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும், பிசறி வைத்துள்ள கிழங்கைப் போட்டு, மிதமான தீயில் வதக்கவும்.

தேவையானால் கொஞ்சம் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

கிழங்கு நன்றாக roast ஆனதும், கடுகு தாளித்து இறக்கவும்.

வறுவல்

கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

முன்பு போலவே கிழங்குடன் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு பிசறிக் கொள்ளவும்.

வாணலியில் 1/4 லிட்டர் எண்ணெய் விட்டு, சூடானதும், கிழங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரிக்கவும்.

சேப்பங்கிழங்கை மோர்க்குழம்பிலும் (செய்முறை) போடலாம்.

கர்னாடகா, மஹாராஷ்டிரா மற்றும் பல வட மாநிலங்களில் சேப்பங்கிழங்கு இலையை சமைத்து சாப்பிடுகிறார்கள். Alu Chi Wadi மஹாராஷ்ட்ராவில் மிக பிரசித்தம்.

Alu chi Wadi

சேம்பு இலைகளை (Alu che paana) காம்பு நீக்கி, கடலைமாவு, புளி விழுது, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, தனியா பொடி, பெருங்காயம், உப்பு இவை அடங்கிய கலவையில் பிரட்டி, ஆவியில் வேக விடவும்.

பின்பு, வேக வைத்த இலைகளை நறுக்கி, அப்படியேவோ அல்லது கொஞ்சம் எண்ணெயில் வதக்கியோ சாப்பிடலாம்.

ராஜப்பா
11:30 காலை
05-03-2010

02 March 2010

சேனைக்கிழங்கு YAM

சேனைக்கிழங்கு, SURAN (hindi), Kandha Gatta (telugu), Elephant Yam (English) என இது அறியப் படுகிறது.

சேனைக்கிழங்கு கறி (ரோஸ்ட்)
தேவையானவை
சேனைக்கிழங்கு 1 கிலோ
மிளகாய்ப் பொடி, 3 டீஸ்பூன்
மஞ்சள் பொடி, 1/2 டீஸ்பூன்
உப்பு,
தாளிக்க: 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய், கடுகு,

சேனைக்கிழங்கின் உறுதியான, தடிமனான தோலை நீக்கவும்.

கிழங்கை நன்றாக அலம்பிக் கொள்ளவும்.

சிறிய சதுரங்களாக (small cubes) நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்.

கடுகு வெடித்தவுடன், அலம்பிய கிழங்கை போடவும்.

மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

வாணலியை மூடி வைத்து கிழங்கை மிதமான தீயில் வேகவைக்கவும். (தண்ணீர் ஊற்றக் கூடாது.

சில கிழங்குகள் சீக்கிரமாகவும், சில கிழங்குகள் தாமதமாகவும் வேகும்.
வெந்ததும், மூடியை எடுத்து விட்டு, கிழங்கு மொறுமொறுப்பாகும் வரை (CRISP) வதக்கவும்.

கறி ரெடி

சேனைக்கிழங்கு வறுவல்

ஒரு கிலோ சேனைக்கிழங்கை தோல் நீக்கி, சிறிய சதுரங்களாக (Cubes) நறுக்கி, நன்றாக அலம்பிக் கொள்ளவும்.

ஒரு பெரிய நியூஸ்பேப்பரில் துண்டங்களை கொட்டி, உலர விடவும்.

மிளகாய்த்தூள் 4 டீஸ்பூன், உப்பு 2 டீஸ்பூன் இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.


வாணலியில் 500 கிராம் எண்ணெயை சூடாக்கி, இரண்டு கைப்பிடி துணடங்களை போடவும்.

துண்டங்கள் பொரிந்ததும், எடுத்து டிஷ்யூ பேப்பரில் போடவும். எண்ணெய் வடிந்ததும், துண்டங்களில் மிளகாய் தூள் + உப்பு கலவையை சிறிது தூவவும்.

காற்றுப் புகாத பாத்திரத்தில் போடவும்.

இதே போன்று எல்லாக் கிழங்கையும் கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுத்து, மிளகாய், உப்பு தூவி, பாத்திரத்தில் போடவும்.

கடைசியில் பாத்திரத்தை நன்கு குலுக்கி, மிளகாய் தூள் உப்பு சமமாக பரவும்படி செய்யவும்.

வறுவல் ரெடி

c. சேனைக்கிழங்கு அவியலில் போட மிகச் சிறந்த காய்.


ராஜப்பா
11:30 காலை
02-03-2010

01 March 2010

பீர்க்கங்காய் Ridge Gourd

பீர்க்கங்காய் (தமிழ்), பீரக்காயா (தெலுங்கு), Toorai (ஹிந்தி) , Ridge Gourd (ஆங்கிலம்) என இது அறியப்படுகிறது.

மருத்துவ விசேஷங்கள்:
பீர்க்கங்காயில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் அறவே கிடையாது. நார்சசத்து, விட்டமின் C, Riboflavin, Zinc, thiamin, iron, magnesium, manganese சத்துக்கள் நிரம்பியது. குளிர்ச்சியானது.

இனி சில பீர்க்கங்காய் சமையல்களை பார்ப்போமா?

முதலில், பீர்க்கங்காய் கூட்டு

பீர்க்கங்காயை நன்கு அல்ம்பி, லேசாக தோல் சீவிக் கொள்ளவும்.
சதுரங்களாக CUBES நறுக்கிக் கொள்ளவும்.

PEERKAN KAI cut for Koottu

குக்கரில் 50 கிராம் பயத்தம்பருப்பு, காய், மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் சாம்பார் மிளகாய் தூள்,  கொஞ்சம் உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். 3 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

குக்கர் ஆறியதும் 1/2 டீஸ்பூன் ஜீரகம், சிட்டிகை பெருங்காயம் போட்டு கலக்கவும்.

இன்னொரு சிறிய வாணலியில் கடுகு, 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, 1 வரமிளகாய் தாளிக்கவும்.

22-06-2018 We made this KOOTTU

கூட்டு ரெடி

அடுத்து, பீர்க்கங்காய் துகையல்.
லேசாக தோல் சீவி, காயை நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு 1 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 3 வரமிளகாய் இவற்றை சிவக்க வறுக்கவும். வறுத்ததை தனியாக எடுத்து வைக்கவும்.

அதே வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, பீர்க்கங்காயை வதக்கவும்.

வறுத்த உ-பருப்பு, மிளகாயை சிறிது புளி சேர்த்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். வதக்கின காயை மிக்சியில் போட்டு, உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும். பீர்க்கங்காயில் தண்ணீர் சத்து நிரம்ப இருப்பதால் தனியாக தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

சாதத்தில் பிசைந்து சாப்பிட துகையல் ரெடி.

அடுத்து, பீர்க்கங்காய் புளிக்குழம்பு.

லேசாக தோல் சீவி காயை நறுக்கிக் கொள்ளவும்.
நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைக்கவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், 2 பச்சை மிளகாய் (கீறிக்கொள்ளவும்), தாளிக்கவும்.

காயை இதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

புளியை கரைத்து ஊற்றி, 1 ஸ்பூன் சாம்பார் மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

புளி வாசனை போனதும் 1/2 ஸ்பூன் அரிசி மாவு கரைத்து ஊற்றவும். சிறிது வெல்லம் சேர்க்கவும்.

புளிக்குழம்பு ரெடி.

கடைசியாக, பீர்க்கங்காய் வறுவல்.

காயை தோலுடன் வில்லைகளாக் நறுக்கிக் கொள்ளவும்.

1 டீஸ்பூன் மிளகாய் பொடியுடன், கொஞ்சம் உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.

கலவையை காய் வில்லைகளில் பிசறி வைத்துக் கொள்ளவும்

200 கிராம் எண்ணெயை வாணலியில் ஊற்றி சூடாக்கவும்.

3 டீஸ்பூன் அரிசி மாவை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு, வில்லைகளை இதில் லேசாக பிரட்டிக் கொண்டு, சூடான எண்ணெயில் பொரிக்கவும்.

ராஜப்பா
10:30 காலை
01-03-2010

On 22 June 2018 we made this Kootu

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...